book

தமிழ் மரபிலக்கணங்களில் இடைச்சொற்கள்

Tamil Marabilakinangalil Idaisorkal

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ப. வேல்முருகன்
பதிப்பகம் :தி பார்க்கர்
Publisher :The Parkar
புத்தக வகை :இலக்கணம்
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2006
Out of Stock
Add to Alert List

இதுவரை ஏறத்தாழ 90 -க்கும் மேற்பட்ட தமிழாய்வாளர்கள்பற்றிய குறிப்புகளை எனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ளேன். அந்த வரிசையில் நண்பர் பேரா. ப. வேல்முருகன் அவர்கள்பற்றி இங்குக் குறிப்பிடுகிறேன். 46 வயதை எட்டியுள்ள முனைவர் ப. வேல்முருகன் அவர்கள் தற்போது திருவாரூரில் அமைந்துள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றிவருகிறார். தமிழ் இலக்கணத்தில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிற இளம் ஆய்வாளர்கள் ஒரு சிலரில் இவரும் ஒருவர். குறிப்பாகத் தொல்காப்பியத்தில் மிகச் சிறந்த ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார். தமிழில் இடைச்சொற்கள்பற்றிய ஒரு விரிவான ஆய்வைத் தனது முனைவர் பட்டத்திற்காக மேற்கொண்டு வெற்றிகரமாக முடித்தவர். தமிழில் முதுகலை, முனைவர் பட்டங்களோடு மொழியியல், தகவல் தொடர்பியல், வரலாற்றியல் ஆகிய துறைகளிலும் முதுகலைப்பட்டங்களைப் பெற்றுள்ளார். எழுத்திலக்கண மாற்றம், தமிழ் மரபிலக்கணங்களில் இடைச்சொற்கள் என்ற இரண்டு ஆய்வு நூல்களுக்காக செம்மொழித் தமிழ் மத்திய ஆய்வுநிறுவனத்தின் சார்பான இந்தியக் குடியரசுத்தலைவரின் 'இளமறிஞர் விருதைப்' பெற்ற இளம் ஆய்வாளர். இலக்கண மரபும் இலக்கியப் பதிவும் என்ற ஆய்வு நூலுக்காக தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் விருதைப் பெற்றுள்ளார். மேலும் `தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் நோக்கில் சங்கச்செவ்வியல் குறுந்தொகை – புள்ளியியல் ஆய்வு’, `கவிதையும் கலையும்’ என்ற இரண்டு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது இயக்கத்தில் 10க்கும் மேலான குறும்படங்களும் ஆவணப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.. ‘கிராமியம்’ என்ற குறும்படம் இந்திய பண்பாடு – நாகரிகம், இயற்கை விழிப்புணர்வு குறித்து 'கிராமியம்' என்ற மிகச் சிறந்த குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.