book

ப்ரச்னோபநிஷத்

Prachnopanishath

₹135+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பீயாரெஸ் மணி
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183687928
குறிச்சொற்கள் :வேதங்கள், பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள்
Add to Cart

‘உலகம் போற்றும் அறிவியல் விஞ்ஞானி நியூட்டன், தோட்டத்தில் ஆப்பிள் மரத்தின் கீழே படுத்திருந்தபோது அவர்மீது ஆப்பிள் விழுந்ததைப் பற்றியே சிந்தித்து, பூமிக்கு ஈர்ப்பு சக்தி இருந்ததைக் கண்டுபிடித்தார்’ என்று நாம் பள்ளிக்கூடத்தில் படித்திருக்கிறோம். இதனால் பூமியின் ஈர்ப்பு சக்தி நியூட்டன் கண்டுபிடித்த பிறகுதான் வந்தது என்று சொல்லமுடியுமா? இந்த ஈர்ப்பு சக்தி பூமி தோன்றிய நாள் முதலே இருந்து வந்திருக்கிறது. இதை நாம் தெரிந்துகொண்டாலும் தெரிந்து கொள்ளாவிட்டாலும், இந்தச் சக்தி இருந்தே தீரும். இதுபோலவே வேதங்களில் கூறப்பட்டிருக்கும் உண்மைகள் எப்போதும் அழியாமல் இருக்கும். அவற்றை நாம் புரிந்து கொண்டாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி!

குருசிஷ்ய உரையாடலில் அதை உரத்துச் சொல்கிறது இந்த உபநிஷத்.