
மொழிப்போர் தியாகிகள்
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ப. பாலசுப்பிரமணியன்
பதிப்பகம் :சங்கர் பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
விடுதலைப் போராட்டத்துக்கு முன்னரே தொடங்கிய இந்த மொழிப்போர், விடுதலைப் போராட்டம் நடந்து முடிந்த, கிட்டத்தட்ட 20 வருடகாலத்தில் இந்தியாவின் மக்களாட்சித் தத்துவத்துக்கு ஒரு மிகப்பெரிய சவாலாகவே கருதப்பட்டது.ஓர் இனத்தின் மொழி அழிக்கப்படுமானால், நாளடைவில் அந்த இனமும் அழிந்துவிடும் என்பதை வரலாற்றுச் சான்று மெய்ப்பித்துக் காட்டிக்கொண்டிருக்கிறது. ஆம், அதற்கு எதிராகத் தொடங்கியதுதான் இந்த இந்தித் திணிப்பு எதிர்ப்பு மொழிப்போர்!
அப்போதைய மதராஸ் மாகாணத் தலைவர் ராஜகோபாலாச்சாரி, பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்கினார். அந்நாளில் கல்வி என்பதே கேள்வியாக இருந்த நிலையில் பிறமொழிக் கல்வியும், அதைப் போதிக்கச் சரியான ஆசிரியர் இல்லா நிலையும், இரண்டாம் பட்சமாக்கப்பட்ட தாய்மொழிக் கல்வியும் மக்களை வெகுண்டெழச் செய்தது. தான் உயிர் இழப்பினும், தன் எதிர்காலச் சந்ததியினராவது தமிழோடு வாழட்டும் என்று மாண்டனர், மொழிப்போர் தியாகிகள் நடராஜனும், தாளமுத்துவும். போராட்டத்தில் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் மருத்துவச் சிகிச்சை பெற வேண்டுமெனில், மன்னிப்புக் கடிதம் கொடுக்க வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கைக்கு மறுத்து, சிறையிலே வாழ்வைத் துறந்தனர். இவ்வாறு மொழிப்போருக்கான முதல்விதை அங்கே தூவப்பட்டது.
