உலக வேளாண்மைப் பொருட்காட்சி
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.இல.செ.கந்தசாமி
பதிப்பகம் :தன்னம்பிக்கை மாத இதழ்
Publisher :Thannambikai maatha ithal
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :75
பதிப்பு :1
Published on :1990
குறிச்சொற்கள் :வேளாண்மை, உழவுத் தொழில், கால்நடைகள்
Out of StockAdd to Alert List
ஆண்டாண்டு காலமாய் மாடாய் உழைத்தும் ஓடாய்த் தேய்ந்து உருக்குலைந்து போனபின்பும் அடிமாடாய் ஓ... ஒரு அடிமாடாய் ஆன பின்பும் உலகுக்கே உணவூட்டும் உழவர் பெருமக்க ளென்ற ''பெருமைப்'' பிணிக்கென்றே பிறப்பெடுத்த இந்திய திருநாட்டின் இனிய நெஞ்சங்களே! ஒற்றுமை இன்மைதான் நம் உயர்வுக்கே தடைக்கல்லென்று இன்றுவரை உணராத, உணர்ந்தாலும் ஒன்றுபட முயலாத ஒற்றைத் தனிமரமாய், இனித்ததொரு காலம் போய் இப்போது பட்டமரம் போல் பாரமாய் பிறர்க்கு எட்டியாய் நிற்கின்ற ஏலமே!
பின்னேர் ஓட்டியே உன் பிழைப்பைத் தொலைத்துவிட்ட வேர்வையே!வெற்றுடம்பே! முன்னுக்கு வா மகனே! முன்னேர் பிடித்து முன்னுக்கு வா மகனே! இது உன் நெஞ்சோடு நெஞ்சத்தின் நேசக் கரங் குவிப்பு!
பின்னேர் ஓட்டியே உன் பிழைப்பைத் தொலைத்துவிட்ட வேர்வையே!வெற்றுடம்பே! முன்னுக்கு வா மகனே! முன்னேர் பிடித்து முன்னுக்கு வா மகனே! இது உன் நெஞ்சோடு நெஞ்சத்தின் நேசக் கரங் குவிப்பு!