இலக்கிய ஆய்வில் ஒப்பாய்வு அணுகுமுறை குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். இலக்கியப் படைப்பாளரும், இலக்கண நூலாரும், சமயவாதிகளும் வளர்த்த ஒப்பீட்டுமுறை இன்று தனிப்பட்ட துறையாக ஒப்பாய்வுத்துறையாக வளர்ந்து வருகிறது. ஒப்பிலக்கிய வளர்ச்சியில் ஒரு இலக்கியத்தைப் பற்றிய அறிவு முழுமை அடைவதோடு நிறைவையும் தருகிறது. ஒருமொழி வட்டத்திற்குள் உலவும் குறுகிய மனப்பான்மை மறைகின்றது. பிறமொழி இலக்கியங்களில் இடம்பொறும் சிறந்தவற்றை ஒருமொழிபெற வாய்ப்பு ஏற்படுகின்றது. இதனடிப்படையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.