உலகத் தமிழர்களின் கவனத்தை பெருமளவிற்கு ஈர்த்துள்ள ஃபிரான்ஸிஸ் ஹாரிசனின் ‘ஈழம்: சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்’ நூலின் இரண்டாம் பதிப்பு இது. ஆங்கில பதிப்பிலும் முதல் தமிழ் பதிப்பிலும் இடம்பெறாத இரண்டு பகுதிகள் ‘மருத்துவ ஊர்தி ஓட்டுநர்’, ‘போராளியின் மனைவி’ புதிய பதிப்பும் சேர்க்கப்பட்டுள்ளன. சாட்சியமற்ற போராக இதுவரை கருதப்பட்ட ஈழத் தமிழரின் 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பல விரிவான சாட்சியங்களை முதல் முறையாக இந்நூல் முன்வைத்துள்ளது. இலங்கையில் முன்னர் பிபிசி செய்தியாளராக பணியாற்றிய ஃபிரான்சிஸ் ஹாரிசன் முள்ளிவாய்க்காலில் இறுதிநாள் வரை துன்புற்றோரின் அவல அனுபவங்களை அக்கறையுடனும் புரிதலுடனும் துல்லியமாக பதிவு செய்துள்ளார்.