முக்கியமாக தி.ஜ.ர.வ.ரா., கு.ஸ்ரீனிவாசன், சொக்கலிங்கம், சங்கு சுப்ரமண்யன், ஏ.என். சிவராமன், பி.எஸ். ராமையா, ரா.நா. போன்றவர்கள் அரசியல் நெருப்பில் முக்குளித்துப் பத்திரிகைக்கு வந்தவர்கள். இவர்கள் அன்போடும் ஆதரவோடும் தங்கள் சங்கப் பலகையில் இடம் கொடுத்து என்னைச் சேர்த்துக் கொண்டார்கள். இவர்களிடம் தினந்தோறும் திருவல்லிக்கேணி கடற்கரையில் நான் கேட்டதும் கற்றதும் என்னை உருவாக்கின. அந்த அனுபவங்கள் நான் மறக்க முடியாதவை. என் இதயப் பொக்கிஷத்தில் வைத்து நிரந்தரமாகப் போற்றப்படுபவை.