1960ஆம் ஆண்டு குமுதம் இதழ் மூலமாக சிறுகதை ஆசிரியராக அறிமுகமான பெண் எழுத்தாளர் ரத்னா தொடர்ந்து 35 ஆண்டுகள் சிறுகதைகள் எழுதி வந்துள்ளார். குமுதம், விகடன், குங்குமம் ஆகிய வெகுஜன பத்திரிகைகளில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. தற்போது இவருக்கு வயது 80. உயிர்ப்புமிக்க சொல்லாட்சிகள் கொண்ட இயல்பான நடையில் எழுதப்பட்ட, பல்வேறு மனப்போக்குகளை வெளிப்படுத்துகிற கதைகள் இவை என்கிறார் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன்.