ஒவ்வொரு காலக் கட்டத்திலும் சில வக்கிரங்கள் நாகரிகமாகக் கருதப்பட்டு, எல்லோரும் அதில் கண்ணை மூடிக்கொண்டு வழுவது நமக்குத் தெரிந்ததே- பாஸிசம், நாசிசம், சர்வாதிகார நாடுகளின் அரசுமுறை, மதவாதம். ஆனால் ஒவ்வொருவரும் விரைவில் பரவிவரும் இந்த நாகரிகத்தைத் தழுவிக்கொள்ள ஒரு காரணம் கற்பிக்காமல் போக முடிவதில்லை. எனவே, மனத்தின் ஒரு மூலையில் ஒரு உறுத்தலும் அதற்குச் சமாதானம் சொல்ல ஒரு தேவையும் தெளிவாகின்றன.