"“சும்மாவிருப்பதே சுகம்” என்ற திருக்கூட்டத்தைத் திரும்பிக்கூட பாராதவன் நான். 1932இல் காங்கிரஸ் சட்டமறுப்பில் ஈடுபட்டு ஓராண்டுச் சிறைவாசம் பெற்றேன். கடலூர், திருச்சி சிறைச்சாலைகளில் எனது பொழுதைச் சும்மா கழிக்க முடியவில்லை. படிப்பும் எழுத்தும் பொழுதைப் போக்கின. என் மனதை உறுத்திக்கொண்டிருந்த விஷயங்களில் ஒன்று பெண்ணடிமை. பெண்ணடிமை தேய்ந்து பெண்ணுரிமை தழைக்க வேண்டுமென்னும் ஆர்வத்தோடு சில பாட்டுகள் அக்காலங்களில் இயற்றினேன் அவற்றி தமிழுலகத்தின் முன் விநயமாக சமர்ப்பிக்கிறேன். அவசியமாயின் ஆதரிக்கட்டும்.
- ஜீவா"