அரசு வேலைவாய்ப்புக்கு இருக்கும் மவுசைப் போலவே தனியார் வேலைவாய்ப்புக்கும் தற்போது மவுசு கூடியிருக்கிறது. கொடுக்கும் சம்பளமும் மற்றும் இதர வசதிகளும்தான் தனியார் வேலைவாய்ப்புக்கு மாணவர்கள் சுண்டி இழுக்கிறது.தற்போது பொயியியல் படிப்பில் பல்வேறு பிரிவுகளில் படித்து வெளிவரும் மாணவர்கள் பெரிதும் விரும்புவது பிபிஓ. வேலை மற்றும் ஐ.டி வேலைகளைத்தான். கஷ்டப்பட்டு வேலை பார்ப்பதைத் தான் இன்றைய தலைமுறையினர் விரும்புகிறார்கள் என்பதற்கு ஐ.டி பணியில் சேரும் இணைஞர்களின் எண்ணிக்கைதான் சாட்சி.பொறியியல் படிப்பு படித்திருந்தால் மட்டும் தான் தனியார் பணியில் கொடிக்கட்டி பறக்க முடியுமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் பத்தாம் வகுப்பு, பிளஸ்2, ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப் படிப்பு போன்ற குறைந்தபட்ச படிப்பு படித்திருந்தாலே போதும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்குச் சேர முடியும். அந்த வகையில் இந்த இ-பப்ளிஷிங் துறைப் பற்றியும், அதில் குவிந்து கிடக்கும் வேலை வாய்ப்பு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.