நுகர்வோர் விழிப்புணர்வு குறித்த பல நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனினும், நுகர்வோர் விழிப்புணர்வுக் காகத் தொடர் பரப்புரை தேவைப்படுகிறது. நுகர்வோரிடம் அவர்களது உரிமைகளை மீண்டும் மீண்டும் எடுத்துக் கூற வேண்டியுள்ளது. உரிமைகளை உணர்த்தி கடமைகளைச் செய்ய நுகர்வோருக்கு இந்நூல் தூண்டுகோலாக அமையும். எளிமையாக எழுதப்பட்டுள்ள இந்நூலில் வாசகர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் பல இடம்பெற்றுள்ளன.