கடற்கரையோர அலைகள் தம்மை அவ்வப்போது வந்து அழகழகாய் வரைந்துவிட்டு செல்வது போலல்ல - கடற்வாழ் மக்களின் வாழ்க்கை. அந்தரத்தில் தலைகூழ் தொங்கியபடி ஒரு சிகரம் போன்ற கட்டடத்திற்கு வெள்ளையடிப்பது போன்றது தாம் கடற்பணி என்பது. விடியல் - இரவு - மழை - சூறாவளி - புயலெல்லாம் ஒன்றென வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். இச்சிறுகதைகள் குமரி மாவட்ட கடற்வாழ் மக்களின் வட்டாரச் சொற்களோடு மிக நுண்ணிய இழைகளால் பின்னப்பட்டு நெய்து தந்திருக்கும் நூலாசிரியர் சி. பெர்லின் அவர்களை எவ்வளவும் பாராட்டலாம்.