ஆத்மாநாமின் கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், கடிதங்கள் அடங்கிய முழுமையான தொகுப்பு இது. இதுவரை தொகுக்கப்படாத / அச்சிடப்படாத பல படைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன. 1984 ஆம் ஆண்டு தனது 33 ஆம் வயதில் அகால மரணமடைந்த ஆத்மாநாமின் படைப்புகள் தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. இலக்கியவாதிகள் முதல் தீவிர இடதுசாரிகள்வரை அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் பெற்றுள்ள ஒரு ஆபூர்வமான இலக்கியவாதி ஆத்மாநாம். பதிப்பாசிரியர் பிரம்மராஜனின் பல ஆண்டு கால முயற்சியில் உருவாகியுள்ள தொகுப்பு இது.