மணியோசை காற்றில் மிதக்கிறது. புத்தகங்களின் வாசனை நம்மைப் புரட்டத்தொடங்குகிறது. அன்பான தோழியோடு வாங்கித் தின்ற நெல்லிக்காய்களும், இலந்தைப் பழங்களும், நாவற்பழங்களும் அடிநெஞ்சில் உதிர்ந்து உருண்டோடுகின்றன. அவளது மழையிலும் வெய்யிலிலும் இதயம் நனைந்தும் காய்ந்தும் நர்த்தனமாடுகிறது. வட்டங்கள் சுழன்றுகொண்டே இருக்கின்றன. வரைந்த 'காம்பசின்' முன் உயிர் நடுவில் காலூன்றி நிற்கிறது.