தலைப் பிரசவம் ' படைத்துள்ள சீ,பாஸ்கர் பாராட்டுக்குரியவ். கூர்ந்த சிந்தனைகளின் தெறிப்புகளை இத்தொகுப்பில் கவிதைகளாகக் காண்கிறேன். அனுபவத்தின் புனைவை ஆதாரமாக கொண்ட சிறு கவிதைகள் வாசிப்பதற்கு வசதியாக இருக்கின்றன. வாசிப்பவரை எளிதில் வயப்படுத்தும் தன்மை கொண்டுள்ளன. தன் பார்வையில் பட்டவற்றைக் கூர்ந்து கவனித்து எளிய மொழிநடையில் கவிதைப்படுத்தியிருக்கிறார். படைப்பாளியின் வித்தியாசமான பார்வை வாசிப்பவர்களை வசீகரிக்கும் என்று நம்புகிறேன்.