உலகப்போர் முடிந்திருக்கிறது. அணு ஆயுதப் பிரயோகத்தால் தாவர வர்க்கமே அற்றுப்போயிருக்கிறது. சில காலம் கழித்து, தனியே ஒரு தீவில் பட்டுப்போன பூமியூக் கீறிக்கொண்டு வரு துளிர் எட்டிப் பார்க்கிறது. போரின் அழிவிலிருந்து தப்பிய இளைஞனொருவன் கண்ணில் அது படுகிறது. வார்த்தைகள் கறைப்படுத்த முடியாத அவனது பொங்கி வரும் களிப்பை நமக்குக் காண்பித்து விட்டு காமிரா மெல்ல பின் நோக்கி நகர்கிறது.