பூக்களில் ரோஜா பல விதங்களில் தனித்தன்மை கொண்டது பருவச் சூழல் இதற்கு மிக முக்கியம்.இதன் இதழ்கள் மிக மிருதுவானவை. இதழ்களைத் தேனில் ஊற வைத்துச் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகி முகத்தில் ஒளி கூடும். அந்த நாளில் ஜமீன்தார்கள் மற்றும் மொகலாய அரசர்கள் ரோஜாவை ஒரு அதிர்ஷ்டமான மலராகப் பார்த்தார்கள்.ஒரு ஆச்சரியம் என்னவென்றால், இது இந்திய மண்ணில் சங்ககாலத்தில் இல்லா ஒரு மலர் ! மிளகாய், வெங்காயம் போல மேல்திசை நாடுகளில் இருந்து வந்த ஒரு மலர்ச் செடியும் கூட.இந்திய மண்ணின் மகத்தான மலர் தாமரை தான் .