இந்தப் புத்தகம் முதல் அத்தியாயத்தில் பிரம்ம சூத்திரத்தைப் பற்றிய விரிவான பொது அறிமுகம் உள்ளது. அதை நீங்கள் படிப்பதற்கு முகாந்திரமாகச் சில செய்திகள் சொல்கிறோம். இந்தக் கட்டுரைத் தொடர் ஏறத்தாழ இரண்டு வரஷங்களாக குமுதம் பக்தி இதழில் வெளிவந்தபோது, பலர் எங்கள் அசாத்தியத் துணிச்சலைப் பாராட்டி எழுதினார்கள். சந்திக்கும்போது சிலாகித்தார்கள். சிலர் 'சுத்தமாகப் புரியவில்லை, ஆனாலும் படித்து வருகிறோம்' என்றார்கள். நாங்கள் 'எல்லா சூத்திரங்களும் அறிமுகமான பின் இவைகளைப் பற்றிய ஒரு முழுமையும் பொது எண்ணமும் கிடைக்கும்.