1994 - 95இல் நான் ஒரு வருஷம் குமுதம் ஆசிரியராக இருந்தேன். ஆசிரியப் பணியில் அடிக்கடி பலவிதமான சிறுகதைகள் எழுத வேண்டியிருந்தது. அவ்வப்போதுப எனக்குப் பிடித்த சில கதைகளைத் தமிழாக்கமும் செய்தேன்.
இதழ் வெளிவருவதன் அவசரக் கட்டாயங்களினிடையில் நன்றாக எழுத வேண்டியது என் எழுத்துக்கு ஒரு சவாலாக இருந்தது. அதை எப்படிச் சமாளித்திருக்கிறேன் என்பதை நீங்கள் கவனிக்கலாம்.
-சுஜாதா