'ஆனந்த விகடன்' பத்திரிகையில் கதைக் கொத்து அமைத்தேன். அந்தக் கதைகள் இவை. எனக்கு சிறுகதைகளை படிக்க சுவாரசியமாக எழுத வேண்டியது முக்கியம். பல வேலைகளுக்கிடையே வாசகர்கள் தன் நேரத்தை உனக்காக ஒதுக்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு உன் தெளிவான கதையைச் சொல்லாமல் என்ன என்னவோ சோக விவரங்களும் புரியாத தத்துவமும் பேசுவதில் எனக்கு விருப்பமில்லை. இந்தக் கதைகளை நீங்கள் இலக்கியத்தில் சேர்க்கிறீர்களோ இல்லையோ, வாசகர்களுக்கு சிலமணி நேரங்கள் உலகை கணித்து கதையை முடித்ததும் சற்றே மேப்பட்ட மனிதர்களாகவீர்கள் என நம்புகிறேன்.
- சுஜாதா