இந்தப் புத்தகத்தில் வரும் ஒருதலைப்பிற்கு ஏசுநாதர் பற்றி, ரமணமகரிஷியிடம் ஒருவர் கேட்ட கேள்விகளுக்கு அவர் கூறிய பதிலுக்காக திரு அருண்மொழியைப் புரட்டிப்பார்த்தேன். அது வெகுநேரம் கிடைக்காமல் அலுப்பை உண்டாக்கியது. எழுதிக்கொண்டிருந்த பேனாவை வைத்துவிட்டு எழுந்துவிட்டேன். சிறிது நேரத்திற்குப் பின் பாபா நீங்கள் உடனே எடுத்துக் கொடுத்தால் தான் எழுதப்போகிறேன். இல்லையெனில் , சிலவருடங்கள் முன் படித்தது நினைவில் இருப்பது இரண்டு வரி மட்டுமே எழுதிவிடுவேன். ஆனால் அது முழுவிளக்கமாக இருக்காது" என்று கூறிவிட்டு மீண்டும் திரு அருண்மொழியை எடுத்துப் பிரித்தேன். அதில்நான் பேனாவை வைத்தபக்கம் பிரிந்தது. அதிலே இருந்தது நான் தேடியவாசகம்.