வாழ்க்கை என்பது எனக்கு மனிதர்கள்தான். எனக்கு இடது, வலது, முன், பின் என்றிருந்து, தங்கள் தங்கள் தோழமையாலும் சூழலாலும் விரோதத்தாலும் எனக்கு இன்று நான் அறிந்திருக்கிற கொஞ்சத்தைக் கற்றுக்கொடுத்தவர்கள் அவர்களே. என் கடைசி நிமிடம் வரை கற்றுக்கொள்கிற, விட்டுக்கொடுக்கிற ஒரு எளிய திறந்த மனத்தைக் காப்பாற்றிச் செல்ல முடியுமெனில் அதுவே நானடைய விரும்பும் சம்பத்தாக இருக்கும்.
- வண்ணதாசன்