இந்த நூல், கனிம மணல், இடைப்பாடு கடற்கரைச் சாலை, சூரைமீன் சட்டம் போன்ற பல்வேறு பிரச்சினைகளை முன்வைக்கிறது. இவை அனைத்தும் வரலாற்று ஆதாரங்கள், அறிவியல் விளக்கங்கள், நிலப்பரப்பு யதார்த்தங்களை அடிப்படையாகக் கொண்டு அலசப்பட்டுள்ளன. முடிந்தவரை, கடற்கரை மீனவர்களின் வாழ்வியலும் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்துப் பிரச்சினைகளும் மீனவர்களின் கோணத்தில் இருந்து ஆய்வு செய்யப்பட்டுள்ளன.