ஒரு கால் நூற்றாண்டு காலமாய் இந்த மண்ணில் மாறிவரும் மனித மதிப்பீடுகளை, பண்பாட்டு மாற்றங்களை, வீழ்ச்சிகளை, நாகரிகத்தின் நசிவுகளை, தனிமனதனைச் சார்ந்த சமுதாய வீழ்ச்சிகளை, தத்துவங்களைச் சார்ந்த சமுதாய எழுச்சிகளை, சமூக வாழ்வை ஊடுருவிக் கிழித்த அரசியலை - தக்கைமேல் கண் வைத்துத் தூங்காமல் காத்திருக்கும் ஒரு தூண்டில்காரனைப் போலக் கண்களையும் காதுகளையும் திறந்து வைத்து கவனித்து வந்திருக்கிறேன்.