எழுத்து என்பது எல்லோருக்கும் வாய்க்காத ஒரு வரம். படிக்கும் அனைவரையும் பரவச நிலைக்கு கொண்டு வரவேண்டும். ஜி.சேகரின் இந்த புத்தகம் அப்படி ஒரு சுவாரஸ்யமான நிலைக்கு நம்மை அழைத்து போகிறது.
கதை எழுதுபவருக்கு கட்டுரை எழுத வராது. கட்டுரை எழுதுபவருக்கு நகைச்சுவை எழுத வராது. ஜி.சேகர் இந்த அத்தனை தளங்களையும் அனாயசமாக தொட்டு போகிறார். கதைகள் அத்தனையுமே மிக அருமை. கனமான விஷயங்களை உள்ளடக்கி நம்மை மூச்சடைக்க வைக்காமல், மெலிதான நகைச்சுவை இழையோட, படிக்க,படிக்க சுஜாதா பாணியில் சின்ன சின்ன கதைகளாக நம்மை பரவசப்படுத்துகிறது.