இந்த கதை 2004 ஆம் ஆண்டு க்ரைம் நாவல் என்ற இதழில் வெளிவந்தது.பஞ்சவர்ண சாஸ்திரிகள் கோயிலில் உச்சிக்கால பூஜையை முடித்துக் கொண்டு வீடு திரும்பும்போது மேற்றளி தெருவில் சிற்சபேசன் எதிர்பட்டார்.'' என்ன சாஸ்திரிகளே ...! வீட்டுக்கு யாரோ கெஸ்ட் வந்திருக்கா போலிருக்கே?''''கெஸ்ட்டா...?'''' ஆமா... உம்ம வீட்டுக்கு முன்னாடி பனிரெண்டடி நீளத்துக்கு கப்பல் மாதிரி ஒரு கார் நின்னுட்டிருக்கு...''''காரா...?''''ஆமா...'''' கார்ல வரக்கூடிய அளவுக்கு எனக்கு கெஸ்ட் யாரும் கிடையாதே...''