ஃபோர்ப்ஸ் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிடுகிறது. அந்தப் பட்டியலைப் பார்த்துவிட்டு கடந்து விடுவதோடு நம் கடமை முடிந்து விடுகிறது. என்றைக்காவது அந்தப் பட்டியலில் இடம்பெற்றுவிட மாட்டோமா என்ற கனவில் உலகின் ஏதாவது ஒரு மூலையில் யாராவது இன்றைக்கும் கடினமாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் இடம்பிடித்த பத்து பேருடைய வாழ்க்கையை கொஞ்சம் நெருங்கி நின்று பார்த்து அவர்கள் என்ன செய்ததால் இந்த உயரத்தை அடைந்தார்கள்? எந்த சக்தி இவர்களை செலுத்தியது? எது இவர்களை செல்வந்தர்களாக்கியது என்ற கேள்விகளுக்கான விடையைத் தேடும் முயற்சிதான் இந்த நூல்