அவள் கண்களைப் பார்த்தேன். ஒரு வேளை அரை கிராக்கோ! அப்படித்தான் போலும். ஜாக்கிரதை. உடை ஒரு மாதிரி இருக்கிறது. பேச்சும் நடையும் கூட, அன்னியர் வீட்டு வாசல் கதவைத் தட்டி உள்ளே சுதந்தரமாக நுழைந்து... யோசித்துப் பார்த்தால் இவள் கதவைத் தட்டவில்லை. கதவைத் திறந்த போது அங்கேயே நின்றுகொண்டிருந்திருக்கிறாள்!.