இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் தொண்டி என்ற கடலோரச் சிற்றூரில் துவங்குகிறது இக்கதைக்களம். இதில் சொல்லப்பட்ட அனைத்தும் கடவுள் நம்பிக்கை சார்ந்த கதைகள் என்பதோடு மட்டுமல்லாமல் உண்மையாக நடந்த, நடந்ததாகச் சொல்லப்பட்டக் கதைகளே இங்கு கோர்க்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி நாட்டார் வழிபாட்டு மரபு கொண்ட நான்கு திருக்கோயில்களின் வரலாற்றையும் முடிந்தமட்டும் பதிவுசெய்துள்ளேன்.