சமயம் பற்றி
'சமுதாய மாற்றப் புரட்சி உண்மையான புரட்சிப் பாதையில் சென்று வர்க்கமற்ற சமுதாயத்தை அமைப்பதில் வெற்றி கண்டுவிட்டால் சமயம் என்பதே மக்களுக்குத் தேவைப்படாத ஒன்றாகிவிடும்' என்று குறிப்பிடும் ஜார்ஜ் தாம்ஸனின் இக்கட்டுரைகள் வெளிவந்து ஏறத்தாழ 75 ஆண்டுகளாகின்றன. இந்நூலில் சமயங்களின் அடிப்படை, சமயமும் அறிவியலும், வர்க்கப் போராட்டம், சமயத்தின் தோற்றுவாய், ஆரம்பகால கிறித்தவ சமயம், சமயச் சீர்திருத்த இயக்கம், இங்கிலாந்துப் புரட்சி, தற்காலப் பாட்டாளி வர்க்கம், கம்யூனிஸ்ட் ஒழுக்க நெறி ஆகிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.