வாழ்ந்த வாழ்க்கையின் சாரத்தைத் தன் எழுத்துக்களின் வழியாக எடுத்துச் சொல்ல விழைவது மாபெரிய தவச்செயல். அது உண்மையில் ஒரு கொடுப்பினை. மொழியறிந்த யாவர்க்கும் பொதுவான அறிதலாகவே வார்த்தை மீன்கள் வலம் வருகின்றன. வாழ்க்கையின் மறுக்க முடியாத ஒரு பங்குபாகத்தை அவரவர் பேச்சுமொழி வகிக்கின்றது. ஆனாலும் ஆயிரத்தில் ஏன் லட்சத்தில் ஒருவரால் மாத்திரமே அந்த மொழியைக் கைக்கொண்டு எழுத்தை சாத்தியப்படுத்த முடிகிறது. அமரர் மாம்பலம் மனோ அவர்கள் எழுதிய இந்தக் கதைகள் மானுடத்தைப் பேசுகின்றன. மனத்தைத் திறந்து தருகின்றன. இருளை விகசிக்கும் ஒளிர்தலை சாத்தியப்படுத்துகின்றன.