இந்நாவல் சிந்தூர் என்ற கிராமத்தின் அழகையும் அதனூடே நிகழ்ந்த அவலங்களையும் மனிதாபிமான நோக்கில் சித்திரிக்கின்ற கதை.
எவ்வளவோ உற்பாதங்களுக்கும் அழிவுகளுக்கும் காரணமும் களமுமான இரண்டாம் உலக
மகா யுத்தம் எண்ணற்ற இலக்கியப் படைப்புகள் உருவாக எல்லா மொழிகளிலும்
வித்திட்டதுபோல். சிந்தூரின் அழிவிலிருந்து ‘ஆத்தங்கரை ஓரம்’ என்ற ஓர்
அற்புதமான தமிழ் நாவல் விளைந்திருக்கிறது.
யதார்த்த நிலையை அடிப்படையாகக் கொண்டு மிகவும் மேன்மையாக எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் தமிழில் எழுதப்பட்ட இந்திய இலக்கியம் எனலாம்