கல்லூரியில் பயில்கின்ற காலத்திலேயே கவிதை எழுதத் தொடங்கி,பல்வேறு வாய்ப்புகளில் தன் கவிதைத் திறனை நிலை நாட்டிச் சிறப்புப் பெற்றவர். உரைநடையிலும் அவர் வல்லவர் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் 'மனக்காட்டுத் தேனடைகள்' எனும் தலைப்பில் சிறந்த நூலை உருவாக்கியிருக்கிறார். 'கட்டுரைகளின் தொகுப்பு' என்றாலும் பெரும்பாலான கட்டுரைகள் கபிலர், பாரதி, பாவேந்தர், சுந்தரனார் என்று கவிஞர்களையே சுற்றி சுற்றி வருகின்றன. ஒன்றிரண்ணு கட்டுரைகளே வேறு செய்திகள் குறித்தவையாக உள்ளன. எனவே, கட்டுரைகள் எழுதினாலும் வேழவேந்தன் கவிதை வட்டத்தை விட்டு வெளியே வரவில்லை; வரமுடியாத அளவுக்கு அவரது கவிதை உள்ளம் ஆழமானதாக அமைந்துள்ளது.