ஓர் இலக்கியவாதி மேற்கொண்டிருக்கிற நெடும்பயணத்தின் தொடர்ச்சியாகவும்,
பண்பட்ட முதிர்ச்சியாகவும் இந்நூல் ஒரு நன்னூலாக விளைந்திருக்கிறது என்பதை
இப்போது எவ்விதமான தயக்கங்களுமின்றி நான் சொல்கிறேன், இந்நூலைப்
படிப்பவர்களும் இதே கூற்றைப் பிறகு முன்வைப்பார்கள்.
அனைத்து விதமான உயிரினங்களையும் தனக்குள் நிறைத்துக்கொண்டு தழைத்தோங்கி
வளர்ந்து, அடர்ந்து பரந்து விரிந்து, பல ஜீவநதிகளைக் கொடையளிக்கின்ற, ஒரு
நெடுமலைத்தொடரைப் போல, இக்கவிதை நூல் தனக்குள் பல மேன்மைகளை
உள்ளடக்கிக்கொண்டு உயிர்த்திருக்கிறது.
- கவிஞர் ஜெயபாஸ்கரன்