செய்தொழில் நேசி! (இங்கிதம் – ஐம்பது) திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொத்தப்புளிபட்டி
என்னும் குக்கிராமத்தில் பிறந்தவர். பல்வேறு இலக்கிய, சமூக இயக்கங்களோடு
தொடர்பு உள்ளவர். இது இவரது இரண்டாவது நூல். வாழ்க்கை மீதான நம்பிக்கையை
இளைய தலைமுறையிடம் தொடர்ந்து விதைத்துக் கொண்டிருக்கிறார்.
செய்தொழில் எதுவாயினும் அதில் சிரத்தையுடன் ஈடுபட வேண்டும் என்பதை
வலியுறுத்தும் சிந்தனைத் துணுக்குகளை உள்ளடக்கியது இந்நூல். நவீன வாழ்வியல்
சூழலில் எச்சூழலையும் வசமாக்கிக் கொள்ளும் வித்தையை படிப்போர் மனதில்
இந்நூல் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.