மண்புழு தான் நிறைய பாரம்பரிய விஞ்ஞானிகள், துறவிகள், கவிஞர்களின் விருப்பத்துக்குரிய விவாதப்பொருளாகவும் புகழ்ச்சிக்குரிய உயிரியாகவும் இருந்திருக்கிறது. எந்த வகையான கடுமையான மண்ணையும் ஊடுருவக் கூடியவை என்று மனோன்மணியம் சுந்தரனார் வியந்திருக்கிறார். பூமியின் குடல்கள் என்று அரிஸ்டாட்டிலும் இயற்கையின் உழவன் என்று சார்லஸ் டார்வினும் புகழ்ந்திருக்கிறார்கள்.