பற்பல பிரபல நிறுவனங்கள் கொண்டே அவரவர்களின் தேங்காய் எண்ணெய்த்தரத்தைப் பெரிது படுத்தி, பேசி, மக்களை வாங்க வைக்க கையாளப்படும் யுக்திகளிலிருந்து தேங்காயின் முக்கியத்துவத்தை அறியலாம். மக்கள் தொகைப் பெருக்கம், நாட்டில் பெருகி வரும் பொருளாதாரச் செழிப்பு, ஆகியவைதான் இதற்குக் காரணம். தேவைக்கேற்ற விளைச்சல் இல்லாத காரணத்தால் விலையும் உயர்ந்து கொண்டே போகிறது. இந்த விலை உயர்வு மத்திய தர மக்களை பெரிதும் பாதிக்கின்றது.