நாம் வேறு வரலாற்று ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்ததால், எவரும் இதுவரை செய்யத் துணியாத பதிப்பு வேலையைச் செய்து, பிறகு மற்றவர் அதைத் தொடர வழிவகுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மூன்று ஆண்டுகளின் நாட்குறிப்புகளை வெளியிடுவதற்கானவற்றைச் செய்து, இதுவரை மேற்கூரிய இரண்டு நூல்களை வெளியிட்டு முடித்தோம். முதல் இரண்டு நூல்களுக்கும் ஆய்வாரிடையே நல்ல வரவேற்பு இருந்த காரணத்தின் உந்துதலில், அவைகளின் தொடர்ச்சியாக இப்பொழுது ஆனந்தரங்கப்பிள்ளை வி - நாட்குறிப்பு சிரீமுக ஆண்டு ( 1753 - 1754 ) என்ற மூன்றாவது நாட்குறிப்பு நூலைப் பதிப்பிப்பதில் மகிழ்ச்சி கொள்கின்றோம்.