பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய சைவ சமயப்பெரியார் இருவர். அவர்கள் பட்டினத்தாரும் பத்திரகிரியாரும் ஆவர். அனைத்துச் செல்வங்களையும் அனுபவிக்கும் அரும்பேறு பெற்ற பத்திரகிரியார், அனைத்தையும் துறந்து ஆண்டியானார். செம்பொருளாம் சிவனையே பற்றுக்கோடாய்க்கொண்டு சிவமயமாய் வாழ்ந்து வந்தார். அவர் குருவாகிய பட்டினத்தார், கலத்திலும் காலிலும் சென்று பெரும்பொருள் ஈட்டும் வணிகர் குலத்தில் பிறந்தவர்.அவரும் ஒருநாள், காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே ' என்று எழுதி வைத்துவிட்டு, அனைத்தையும் துறந்து ஆண்டியானார். இவ்விரு துறவியரும் பாடஇய பாடல்கள்,இனிய சந்தத்தில் அமைந்த எளிய பாடல்களாகும்.