மற்றவர்களைப் போலவே நானும் பல விதமான 'மாயை' யான கருத்துகளையும் மூட நம்பிக்கைகளையும் கேட்டு, அவை எப்படி மக்களைத் தவறான பாதைக்கு எடுத்துச் செல்கின்றன என்பதைக் கண்டவன். அவை கடுமையான விளைவுகளை ஏற்படுத்த வல்லவை. ஆதலால், மக்களின் நன்மையைக் கருதி அவற்றிற்கு விளக்கம் தர வேண்டும் என்னும் முயற்சியில் எழுந்ததுதான் இந்த நால்.