கவிதைக்கு பொருத்தமான, தவிர்க்க முடியாத மொழி என்ற ஒன்றை கவிஞன் கண்டடைகிற போது கவிதையின் உள்வாழ்க்கை அழகியல் தோரணமாகிவிடுகிறது."கவிதையின் வடிவம் தனித்துவமாக அதன் அர்த்தத்தை உள்ளடக்கியது". கவிதையின் மொழி "எதிர் அல்லது முரண்பாடுகளின் நல்லிணக்கத்தை பாதிக்கிறது." கவிதைக்குள் முரண்பாடு செயல்படுகையில், முரண்பாடு பெரும்பாலும் கவிதையின் அர்த்தத்தையும் அமைப்பையும் குறிக்கிறது, இதனால் முரண்பாடு கவிதையின் பொருள் ஆகிறது.இதனால் தான் லார்க் பாஸ்கரனின் கவிதைகள் கவனக்குவிப்பை கோருகின்றன.ஒரு குழந்தையை விரல்பிடித்து அழைத்து வருவது போல் கவிதையை அழைத்து வருகிறார்.கவிதையின் ஆகச்சிறந்த ஆகிருதியிது.
- எச்.முஜீப் ரஹ்மான்