கதை வலுவாய் இருந்து கருத்தும் இலட்சிய முள்ளதாக இருந்து, அவற்றைச் சுவையாகவும் கூறத்தெரிந்திருந்தால் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களையும் சொக்கவைக்க முடியும் என்னும் நம்பிக்கையை அளித்த பெருமைக்குரியவை, இதிலுள்ள ஐந்து கதைகளும். இவை எல்லாமே பின்னால் கோகுலத்தில் தக்க மாற்றங்களுடன் படக் கதைகளாக வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றன. அவற்றையே படிக்கும் கதை வடிவில், தலைப்பு மாற்றங்களோடு இப்பொழுது இந்த நூலில் உங்களுக்காகத் தந்துள்ளேன்.