மாசாணியம்மன் கோயிலில் முதன்மையான தெய்வம் மாசாணியம்மன்தான். மனக்குறைகளைத் துண்டுச் சீட்டில் எழுதி அம்மனின் கையில் கட்டிவிட்டாலும், அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறாள் மாசாணி. கோயில் பிராகாரத்தில் சப்தகன்னிகள், பேச்சி, துர்கை, மகிஷாசுர மர்த்தினி, பிள்ளையார், புவனேஸ்வரி, பைரவர் ஆகியோர் அருள்புரிகிறார்கள்.