பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள்.. தமிழ் மக்களின் இல்லங்களில் எல்லாம் சலங்களை ஒலியும் நாதஸ்வர இசையும் கேட்க ஆரம்பித்தன. ஆம், தில்லானா மோகனாம்பாளின் அழகு நடனமும், சண்முகசுந்தரத்தின் அற்புத நாதஸ்வர இசையுந்தாம் அவை. நாதஸ்வர இசையா, நாட்டியக் கலையா, எது சிறந்தது என்னும் அரும்பெரும் தத்துவத்தை அற்புதமாக விளக்கி, ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து, இலட்சக்கணக்கான ரசிகர்களின் பாராட்டை ஒருமனதாகப் பெற்ற நாவல், தில்லானா மோகனாம்பாள்.