திரைப்படக் கல்லூரியில் படித்து முடித்து வெளியே வரும் மாணவர்கள்
தாங்கள் சொந்தமாக படம் எடுக்க கதையும், பணமும் தேடுகிறார்கள். அவர்களுக்கு
கதை கிடைத்ததா, பணம் கிடைத்ததா. அது தான் இந்த ’கடிகார கோபுரம்’ நாவல்.
இது மும்பையில் நடக்கும் கதை.
மேஜிக்
ரியலிசம் என்னும் மாய யதார்த்தவாதக் கதைகள் ஏற்கனவே தமிழில் இருக்கின்றன.
ஒரு நல்லதைச் சொல்ல, ஒரு உண்மையைச் சொல்ல, கதை இந்த வகையிலும் சொல்லப்
படலாம். எழுத்தாளர் சுஜாதா கூறுவது போல, இவ்வகைக் கதைகளில் கலவைச்
சுதந்திரம் எழுத்தாளனுக்கு வழங்கப் படுகிறது. எந்த விகிதத்தில் மாயமும்,
யதார்த்தமும் கலக்கப் பட வேண்டும் என்பது எழுத்தாளனின் முடிவுக்கு விடப்
படுகிறது. மாயம், யதார்த்தத்துக்கு வெகு அருகிலே இருக்க வேண்டும் என்ற கலவை
இந்த நாவலில் தென் படுகிறது. இந்த நாவலில் கதை இரண்டு காலங்களில்
நடைபெறுகிறது.