எல்லா ஜீவராசிகளுக்கும் உணவு மிகவும் அவசியம் . சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும் என்பது பைல உடல் நன்றாக இருந்தால் தான் உயிர் வாழ முடியும் ? அந்த உடலுக்கும் உயிருக்கும் இன்றியமையாத தேவைகளுள் ஒன்றான உணவு இருந்தால் தானே அவற்றைப் போற்றிப் பாதுகாக்க முடியும். சைவ உணவாக இருப்பினும்,அசைவ உணவாக இருப்பினும் சுத்தம், சுகாதாரமான முறையில் சுவையும்,மணமும் நிறைந்ததாக தயார் செய்து நமக்கும்,நம் குடும்பத்தினருக்கும் உடல், மன ஆரோக்கியம் கிடைக்கச் செய்வது நமது கடமையாகும்.சமையல் என்னும் கடலில் நல்முத்துக்களாக நூற்றி முப்பது அசைவ சமையல் வகைகள் இந்தப்புத்தகத்தில் வெளிவந்துள்ளன. படித்து,தயாரித்து குடும்பத்தவர் மற்றும் விருந்தினரின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள் என்பதில் சந்தேகமில்லை.