பிச்சைக்காரர்களின் உலகில் ஒளிந்து கிடக்கும் கதைகள் அபூர்வமானவை. ஒரு யாசகனின் வாழ்வில் அடுத்தவனுக்கு அதிகமான இடம் இருப்பதில்லை. ஒவ்வொருவரும் தனது தனித்தீவில் வாழ்பவர்கள். அப்படியான மகா மானுடர்களின் புற மற்றும் அக வாழ்வின் நுட்பமான சித்திரங்களை புனைவின் வழி சாத்தியமாக்கியிருக்கிறார் தீன். தமிழில் பிச்சைக்காரர்கள் குறித்து முழுவதுமாக வெளியான செவ்வியல் படைப்பாக இந்த நாவல் அமைந்துள்ளது.