இலங்கைக் கடற்படையால் இராமேஸ்வரம் கடலோர மீனவர்கள் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் இந்திய ஊடகங்களுக்கு ஓர் ஆறாம்பக்க செய்தி அவ்வளவு தான். ஆனால், அந்தச் செய்திகளுக்குப் பின்னே ஒரு வாழ்க்கை இருக்கிறது. ஒரு குடும்பத்தின் சீர்குலைவு இருக்கிறது. காலங்காலமாக கடலோடு கொண்டிருந்த பாரம்பரியத் தொடர்புகளை முறித்துக்கொண்டு தன் நிலத்திலிருந்து வேறு பிழைப்புக்காக வெளியேறும் ஒரு பரதவனின் பெருங்கவலை இருக்கிறது.