தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூகச் செயற்களத்திற்குத் திராவிட இயக்கத் தலைவர்கள் வந்த பின்தான் தமிழர் மறுமலர்ச்சி தொடங்கியது என்பது போன்ற திரிபுகள் பரப்பப்பட்டுள்ளன. அதனால் தமிழர் மறுமலர்ச்சியைத் தொடங்கி வைத்த தமிழச் சான்றோர்கள் பலரின் வாழ்க்கை வரலாற்றை - அவர்களின் பங்களிப்புகளை இக்காலத் தமிழர்கள் உரியவாறு அறிந்து கொள்ளாத நிலை உள்ளது. தமிழ்த்தேசியம் எழுச்சி பெற்று வரும் இக்காலத்தில் தமிழுக்கும் தமிழினத்திற்கும் தொண்டு செய்த நம் முன்னோர்கள் மீண்டும் புத்துயிர் பெறுகிறார்கள். தன் சொந்த இனத்தின் வரலாற்றுப் பெறுமிதங்களை உணராத இனம். போற்றாத இனம் அயல் இனத்தார் திணிக்கும் அவர்களின் ஆதிக்க வரலாறுகளைச் சுமந்து அடிமை வாழ்வு நடத்திக் கொண்டிருக்கும்.